இலங்கை செய்தி தமிழ்நாடு

தமிழக முதல்வரை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

  • December 19, 2025
  • 0 Comments

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று (19) சென்னையில் இடம்பெற்றுள்ளது. இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்கு விரைவாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தமது நன்றியை […]

இலங்கை செய்தி

சம்பத் மனம்பேரிக்கு தொடர்ந்தும் தடுப்பு காவல்

  • December 19, 2025
  • 0 Comments

மேல் வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரி இன்றைய தினம் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாலும், அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதாலும் சந்தேகநபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்ய மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அனுமதி கோரினர். தற்போதுள்ள தடுப்புக்காவல் உத்தரவு முடிவடையும் எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து மேலும் 90 […]

இலங்கை செய்தி

வெரஹெர மோட்டார் போக்குவரத்து துறையில் அவசர சேவை சீர்திருத்தங்கள்

  • December 19, 2025
  • 0 Comments

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வெரஹெரா மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்தை இன்று (18) ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்த பல அவசர நிர்வாக மற்றும் சேவை சீர்திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களின் வசதிக்காக உடனடியாக வரிசை முகாமைத்துவ முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், பிரதான நுழைவாயிலுக்கு அருகில் மூன்று மொழிகளில் பெயர் பலகைகள் நிறுவப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், 2026 […]

உலகம்

சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் தண்டனை – மோசடியாளர்களுக்கு 24 பிரம்படிகள் உறுதி!

  • December 19, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில்   குற்றவியல் சட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தங்களுக்கு அமைய மோசடி செய்பவர்கள்  24 பிரம்படிகளை கட்டாயமாக பெறுவார்கள் என உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இந்த தண்டனை டிசம்பர் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. மேலும் இந்த சட்டமானது ஏற்கனவே உள்ள சிறைத்தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தண்டனைகளையும் வலுப்படுத்துகிறது. இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நமது குற்றவியல் சட்டங்கள் பயனுள்ளதாகவும், நியாயமாகவும், வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்ப செயல்படுவதையும் உறுதி செய்துள்ளதாக  […]

Meeting between ACJU representatives and Muslim Media Forum members இலங்கை செய்தி

ஜம் இய்யதுல் உலமா – முஸ்லிம் மீடியா போரம் சந்திப்பு!!

  • December 19, 2025
  • 0 Comments

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழுவுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு (18) வியாழக்கிழமை மாலை உலமா சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி தலைமையிலான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, 100 வருட வரலாற்றைக் கொண்ட உலமா சபை முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் சமூக வலுவூட்டலில் ஊடகவியலாளர்களின் வகிபாகம் குறித்தும் விரிவான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. நாட்டின் பல்வேறு […]

உலகம் ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் நியமனம்

  • December 19, 2025
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக (Archbishop of Westminster) பேராயர் ரிச்சர்ட் மோத் (Richard Moth) நியமிக்கப்பட்டுள்ளார். வத்திகான் இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, 2009 ஆம் ஆண்டு முதல் இப்பொறுப்பை வகித்து வந்த 80 வயதான கார்டினல் வின்சென்ட் நிக்கோல்ஸின் (Vincent Nichols) ஓய்வைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக Arundel மற்றும் Brighton ஆயராகப் பணியாற்றிய ரிச்சர்ட் மோத், சுமார் 60 இலட்சம் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவராகப் […]

Trincomalee to Colombo morning train service launch updates. இலங்கை செய்தி

திருமலை – கொழும்பு காலை நேர ரயில் சேவை நாளை ஆரம்பம்

  • December 19, 2025
  • 0 Comments

திருகோணமலை – கொழும்பு கோட்டை நேரடி புகையிரத சேவை நாளைய தினம் முதல் (20.12.2025) ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தவகையில் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி (7084) காலை 07.00 மணிக்கு புறப்படும் அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து (7083) திருகோணமலை நோக்கி காலை 06.00 மணிக்கு புறப்படும். இரவு ரேந ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துவந்த நிலையில் தற்போது காலை நேர புகையிரத சேவை மட்டுமே இயங்கவுள்ளது. இரவு நேர புகையிரத சேவை இயங்குவது தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் […]

உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • December 19, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட சில பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று வெள்ளிக்கிழமை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பாக்லான் மாகாணத்தின் நஹ்ரின் மாவட்டத்தில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய ஆண்டுகளில், தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் பல தசாப்த கால மோதல்கள் […]

ஐரோப்பா

பாரிஸின் லூவ்ரே ( Louvre) அருங்காட்சியகம் மீளவும் திறப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

பாரிஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகம் இன்று மீளவும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீளவும் பணிக்கு திரும்பியுள்ள நிலையில், அருங்காட்சியகம் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியக ஊழியர்களின் பொதுக் கூட்டத்தின் போது வேலைநிறுத்தத்தை கைவிடுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை வேலைநிறுத்தத்தை மீண்டும் தொடங்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க தொழிலாளர்கள் ஜனவரி 5 ஆம் திகதி  மற்றொரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி பிரான்ஸில் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் லூவ்ரே […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? திங்கள் மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை உலக வங்கியால் கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “ பேரிடரால் ஏற்பட்ட மொத்த இழப்பு தொடர்பான உத்தேசத்தை மேற்படி அறிக்கைமூலம் அறியமுடியும். 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி சந்தைக்குவரும்போது ஏற்படும் பணவீக்கம் தொடர்பான காரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில் பொருட்கள் […]

error: Content is protected !!