இலங்கை செய்தி

இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க IMF இன் நிறைவேற்றுச் சபை அனுமதி

  • December 19, 2025
  • 0 Comments

விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. டிட்வா புயலினால் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நாட்டின் பேரின பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்த நிதியுதவி இலங்கைக்கு பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது. புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்கும், இலங்கையின் மீட்சி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு IMF […]

உலகம் செய்தி

விண்வெளிக்கு பயணம் செய்யும் முதல் சக்கர நாற்காலி வீரர்

  • December 19, 2025
  • 0 Comments

உலக பணக்காரர் ஜெஃப் பெசோஸால்(Jeff Bezos) நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின்(Blue Origin), முதல் முறையாக சக்கர நாற்காலி(wheelchair) வீரரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. விண்வெளி(aerospace) மற்றும் மெக்கட்ரானிக்ஸ்(mechatronics) பொறியாளரான மைக்கேலா மிச்சி பென்தாஸ்(Michaela “Michi” Benthaus), வரவிருக்கும் NS-37 பயணத்தில் ஐந்து குழு உறுப்பினர்களுடன் இணைய உள்ளார். 2018ம் ஆண்டு ஏற்பட்ட சைக்கிள் விபத்திற்குப் பிறகு சக்கர நாற்காலியில் இருக்கும் பென்தாஸுடன், பொறியாளர் ஹான்ஸ் கோனிக்ஸ்மேன்(Hans Koenigsmann), தொழில்முனைவோர் நீல் மில்ச்(entrepreneur Neil Milch), […]

இந்தியா செய்தி

இந்திய பிரதமரால் திறக்கப்படும் வடகிழக்கின் மிகப்பெரிய விமான நிலைய முனையம்

  • December 19, 2025
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) நாளை குவஹாத்தியில்(Guwahati) உள்ள லோகப்ரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச (Lokapriya Gopinath Bartolome International) விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைக்க உள்ளார். கிட்டத்தட்ட 1.4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள புதிய முனையக் கட்டிடம் ஆண்டுதோறும் 1.3 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையக் கட்டிடம் மூங்கில்(bamboo) கருப்பொருளின் கீழ் அசாமின்(Assam) பல்லுயிர் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்றுள்ளது. தனித்துவமான […]

இலங்கை செய்தி

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

  • December 19, 2025
  • 0 Comments

மகாவலி ஆற்றுப் பகுதியை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் 24 மணி நேரத்திற்கு நீட்டித்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (20) மாலை 5.30 வரை அமலில் இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மகாவலி நீரேந்தும் பகுதிகளில் சில இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் மகாவலி பள்ளத்தாக்கின் மேல்நிலை நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் காரணமாக ஏற்படும் சிறிய வெள்ள அபாயம் காரணமாக நேற்று (18) இந்த எச்சரிக்கை […]

இலங்கை

500 இற்கும் மேற்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் அமெரிக்க பயிற்சியில் பங்கேற்பு

  • December 19, 2025
  • 0 Comments

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க நீதித்துறை நடத்திய ஒரு திட்டத்தின் மூலம் 500 க்கும் மேற்பட்ட புதிய இலங்கை சட்டத்தரணிகள், விசாரணை வழக்குகள் தொடர்பான மற்றும் குற்றவியல் சட்ட நடைமுறைகள் குறித்த பயிற்சி பெற்றுள்ளனர். இந்த திட்டம் நீதித்துறை வெளிநாட்டு சட்டத்தரணி மேம்பாடு, உதவி மற்றும் பயிற்சி அலுவலகம் (OPDAT) மூலம் மேற்கொள்ளப்பட்டது என்றும், புதிய சட்டத்தரணிகளுக்கான தொடர்ச்சியான சட்டக் கல்வியில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. தூதரகத்தின் கூற்றுப்படி, இந்த பயிற்சி […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் லங்காஷயரில் (Lancashire) மிதமான நிலநடுக்கம் பதிவு!

  • December 19, 2025
  • 0 Comments

இங்கிலாந்தின் லங்காஷயரின் (Lancashire) சில்வர்டேல் (Silverdale) பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 2.5 ரிக்டர் அளவில் பதிவானதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பிளாக்பூல் (Blackpool) மற்றும் ஃப்ளூக்பர்க் (Flookburgh) உள்ளிட்ட மோர்கேம்பே (Morecambe) விரிகுடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு வசிப்பவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், வீட்டில் சில பொருட்கள் அசைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு அதே பகுதியில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – மூன்றாம் நாள் முடிவில் 356 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி

  • December 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி அடிலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்த வகையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 371 ஓட்டங்களை பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில், அலெக்ஸ் கரே(Alex Carey) 106 ஓட்டங்களும் உஸ்மான் […]

உலகம் ஐரோப்பா செய்தி

வட்டி விகிதக் குறைப்பு: நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துமா?

  • December 19, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த நவம்பர் மாத சில்லறை விற்பனை எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ‘பிளாக் பிரைடே’ (Black Friday) எனப்படும் விசேட சலுகைக்காலத் தள்ளுபடிகள் வழங்கப்பட்ட போதிலும், நுகர்வோர் மத்தியில் அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய புள்ளிவிபரத் திணைக்களம் (ONS) இன்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி: சில்லறை விற்பனை 0.1% சரிவைச் சந்தித்துள்ளது. இது 0.4% வளர்ச்சியடையும் என்ற பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துள்ளது. சுப்பர் மார்க்கெட் விற்பனையானது தொடர்ச்சியாக நான்காவது மாதமாக […]

ஐரோப்பா

AIயின் வருகை : இங்கிலாந்து தொழிற்சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • December 19, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவின் (AI) விரைவான முன்னேற்றம் காரணமாக, குறிப்பிடத்தக்க வேலை இழப்பிற்கு இங்கிலாந்து தயாராக இருக்க வேண்டும் என இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி (Andrew Bailey) எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழில்துறை புரட்சியின் போது ஏற்பட்ட சமூக மாற்றங்களையும், AI வருகையின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ஒப்பிட்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது பாரிய வேலையின்மையை ஏற்படுத்தவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் AI-யுடன் தொடர்புடைய பயிற்சி, கல்வி மற்றும் திறன்களைக் […]

error: Content is protected !!