பதவியை ராஜினாமா செய்த கென்யா காவல்துறைத் தலைவர்
கென்யாவின் காவல்துறைத் தலைவர் ஜாபெத் கூமின், எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்ட சமீபத்திய வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது அதிகாரிகளின் நடத்தையை விமர்சித்ததை தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளார். நவம்பர் 2022 முதல் அந்தப் பொறுப்பில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜாபெத் கூமினின், “ராஜினாமாவை ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ ஏற்றுக்கொண்டார்” என்று ஜனாதிபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டக்ளஸ் கன்ஜா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. […]













