இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் இலக்கத் தகடுகள் இல்லாத நிலையில் 15 ஆயிரம் வாகனங்கள்

இலங்கையில் சுமார் 15 ஆயிரம் வாகனங்களுக்கு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 15 நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content