இலங்கை செய்தி

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பயணிகள் படுகாயம்

திருகோணமலை – சேருநுவர, மகிந்தபுர சந்தி பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற சமயம் பேருந்தில் 21 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக சேருநுவர மற்றும் முத்தூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!