இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 பேர் கைது!

நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் வடக்கடலில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 03 மீன்பிடி படகுகளில் இருந்த இந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மிலாடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்த வடக்கு கடற்படை கட்டளை, அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக  தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)
See also  இலங்கையில் கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவுகளின் விலைகள் குறைப்பு!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content