ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சிறிய தவறால் ஏற்பட்ட விபரீதம்

பிரித்தானியாவை சேர்ந்த Tom Arnold என்னும் முதியவர் இணையம்வழி தவறுதலாக 60 வாசிப்புக் கண்ணாடிகளை வாங்கியுள்ளார்.

அந்தத் தகவலை அவரது மகன்  Chris Arnold தமது Twitter பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவு இதுவரை 2 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

10 அல்லது 12 கண்ணாடிகள்தான் வாங்குவதாக அவரது அப்பா நினைத்திருந்தாராம். ஆனால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட கண்ணாடிகளின் எண்ணிக்கையைப் பார்த்தபிறகுதான் அவர் அதிர்ச்சியடைந்ததாகக் கிறிஸ் கூறினார்.

நானும் எனது மனைவியும் வாசிப்புக் கண்ணாடிகளை அடிக்கடி தவறவிடுவதுண்டு. எனவே குறிப்பிட்ட எண்ணிக்கையில் கண்ணாடிகளை வாங்கி வீட்டின் பல இடங்களில் வைத்துவிடுவேன். ஆனால் இம்முறை வாங்கும்போது தவறு நடந்துவிட்டது என Tom குறிப்பிட்டுள்ளார்.

இது தமக்கே மிகவும் நகைச்சுவையாக இருந்ததாக டோம் கூறினார். 10 கண்ணாடிகளை மட்டும் வைத்துக்கொண்டு இதர 50 கண்ணாடிகளைத் திருப்பிக்கொடுக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த Twitter பதிவைக் கண்ட இணையவாசிகள் இதுவரை தாங்கள் தவறுதலாக அதிகமாக வாங்கிய பொருள்கள் குறித்துக் கருத்துகள் பதிவிட்டு அந்தச் சம்பவத்தை மேலும் கலகலப்பாக்கி வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி