ஐரோப்பா செய்தி

ஏவுகணை பற்றாக்குறையுடன் போராடும் ரஷ்யா!

ரஷ்ய படைகள் துல்லியமான ஏவுகணை பற்றாக்குறையுடன் போராடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் முக்கிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஏவுகணை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கியேவ்,  சைட்டோமிர்,  சபோரிஜியா மற்றும் ஒடேசா ஆகிய பகுதிகளில் 21 ட்ரோன்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இலையுதிர்காலத்தில் நடந்த தாக்குதல் மிகவும் தீவிரமானவையாக இருந்தன என அமெரிக்காவைத் தளமாக கொண்ட ஆய்வுக்குழு ஒன்று தெரிவித்துள்ளது. இதன்போது அதிகளவில் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது ரஷ்யா பற்றாக்குறையை சந்திக்கலாம் எனவும் விமர்சித்துள்ளனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!