இலங்கை

இலங்கையில் மாசி கருவாட்டுக்குள் சிக்கிய மர்மம் – விற்பனையாளர் அதிரடி கைது

தங்காலையில் மாசி கருவாடு விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததற்காக தங்காலை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மாசி கருவாடு விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மாசி கருவாடு விற்பனை செய்யும் போர்வையில் இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் 28 வயதானவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் சந்தேகநபர் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

(Visited 2 times, 4 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்