April 8, 2025
Follow Us
ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு வரும் சட்டம்!

தெற்கு ஆஸ்திரேலியாவில் பல பொது இடங்களில் புகைபிடித்தல் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதனால், பள்ளிகள் – வணிக வளாகங்கள் – பொது அலுவலகங்கள் – அரங்கங்கள் மற்றும் கடற்கரைகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன.

ஒவ்வொரு இடத்தையும் பொறுத்து 5 முதல் 10 மீட்டர் தூரம் வரை புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.

மதுபானசாலைகளில் சிகரெட் விற்பனை இயந்திரங்களை நிறுவுவதும் இடைநிறுத்தப்படவுள்ளதுடன், சிறார்களுக்கு சிகரெட் விற்பனை தொடர்பான அபராதத் தொகையை இரட்டிப்பாக்குவது முக்கிய யோசனையாகும்.

தற்போது அபராதம் 1200 டொலர்களாக உள்ள நிலையில் அதனை 2400 டொலர்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் – முதியோர் பராமரிப்பு மையங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் அருகே புகைபிடிப்பது தொடர்பாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித