இலங்கை செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – தொலைபேசியில் பேசியதால் காதை பறிக்கொடுத்த நபர்

பதுளையில் பாதசாரி கடவையில் வைத்து, கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரின் காதை நபர் ஒருவர் துண்டித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பதுளை – மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் வீதியைக் கடக்கும் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதசாரி கடவையின் நடுவில் வைத்து தனது கையடக்கத் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்குப் பதிலளித்தமையால், கோபமடைந்த அதே பாதசாரி கடவையை கடந்த மற்றுமொரு நபர், தாம் வைத்திருந்த கத்தியினால் அவரின் காதை துண்டித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் விசேட தேவையுடையவர் என்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட தேவையை கொண்டவரின் காதை துண்டித்தவர், அவரை நிலத்தில் வீழ்த்தி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சம்பவத்தின் பின்னர் தப்பிச்சென்ற தாக்குதல்தாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content