இலங்கை செய்தி

யாழ் வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் 22ம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த பெண் ஒருவர் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசலகூடத்தொகுதியில் வீசி இருக்கலாம் என நம்புகின்றோம்.

இந்நிலையில் மீட்கப்பட்ட கரு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரிடமும் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளோம்.அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!