இலங்கை

காலி: ஒரே குடும்பத்தில் இருவர் வெட்டிக்கொலை – சிறுவன் உயிர் தப்பியது எப்படி?

காலி மாவட்டத்தின் மாவடவில பகுதியில் உள்ள வீட்டிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்பட்டதாக தெலிகட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெட்டுக் காயங்களுக்கு உள்ளான பெண்ணொருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளில் வயதான பெண்ணொருவரும், 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும், அதே வீட்டில் 17 வயதான சிறுவன் காயங்கள் எதுவுமின்றி இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வயதான தாய், அவரது மகள் மற்றும் மருமகன் என நம்பப்படுகிறது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை தெலிகட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!