இலங்கை செய்தி

பதுளையில் ‘ஒரு மில்லியன் தன்னார்வலர்கள்’ திட்டம்: 1000 இளைஞர்கள் களத்தில்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒரு மில்லியன் தன்னார்வலர்கள் (One Million Volunteers) வேலைத்திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் பிரம்மாண்ட சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுமார் 1000 தன்னார்வ இளைஞர்கள் பங்கேற்கும் இத்திட்டத்தின் மூலம், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைத்தல், வீதிகள் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைச் சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகமும் இடம்பெறவுள்ளன.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, சிலாபத்தைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இது பதுளையில் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்கள் volunteer.nysc.lk என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!