செய்தி தமிழ்நாடு

காண்போரை பிரம்மிக்க வைத்த முளைப்பாரி ஊர்வலம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டி பல்லவராயன் பத்தையில் அமைந்திருக்கும் ஸ்ரீ.அங்காளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ.வலம்புரி விநாயகர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுப்பட்டி பல்லவராயன் பத்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோட்டைக்காடு கன்னியான் கொள்ளை,  கடுக்காக்காடு பொதுமக்கள் பல்லவராயன் பத்தை விநாயகர் கோயிலில் இருந்து முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு மேளதாள இசை முழக்கத்தோடு ஊர்வலமாக ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலுக்கு எடுத்து சென்றனர்.

குதிரை நடனமிட வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்று காண்போரை பிரமிக்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

(Visited 9 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!