இலங்கை

இலங்கையில் இளம் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்

வென்னப்புவ பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் இந்த குற்றத்தைச் செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் 21 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் எனவும் அவர் வென்னப்புவ, தம்பரவில பகுதியில் வசித்து வந்தார் எனவும் தெரியவந்துள்ளது.

கொலை செய்த 29 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரான கணவரும் ஒரு ஓடு தொழிற்சாலையில் வேலை செய்து வருவதாகவும் அதற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்