இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாப்கின் பாவனையை நிறுத்தியுள்ள பெண்கள்

தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் இலங்கையில் சுமார் நாற்பது வீதமான பெண்கள் சானிட்டரி நாப்கின் பாவனையை நிறுத்தியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சானிட்டரி நாப்கின்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை வருகையும் குறைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

15 முதல் 47 வயதுக்குட்பட்ட பெண்களில் 40 சதவீதம் பேர் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதற்கு முக்கியக் காரணம் சானிட்டரி நாப்கின்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாக குடும்பக் கட்டுப்பாடு குறித்து சிவில் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு 51 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களின் விலை 90% மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை 30% உயர்த்தப்பட்டுள்ளது.

சானிட்டரி நாப்கின்களின் விலை உயர்வால் தங்கள் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தாய்மார்கள் தெரிவித்தனர்.

இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தாவிடின் பெண்கள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content