இலங்கையில் காற்றின் வேகம் அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையை ஒட்டிய கடற்பரப்புகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அந்தக் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





