அரசியல் இலங்கை செய்தி

ரணிலுக்காக எம்.பி. பதவியை துறப்பாரா ரவி?

அரசியலில் இருந்து தான் ஓய்வுபெற்றுவிட்டதாக ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe கட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க Ravi Karunanayake தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, ரணில் நாடாளுமன்றம் வருவதற்காக தேசிய பட்டியல் எம்.பி. பதவியை துறப்பதற்கு நீங்கள் தயாரா என ரவி கருணாநாயக்கவிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடாது என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும்.

அரசியலில் இருந்து தான் ஓய்வு பெற்றுவிட்டதாக ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் எம்மிடம் தெரிவித்துவிட்டார்.

எனினும், நீங்கள் கூறுவதுபோல ரணில் விக்கிரமசிங்க மேற்படி முடிவை எடுத்தால் நன்றி உணர்வின் அடிப்படையில் எனது தீர்மானம் அமையும்.” – என்றார் ரவி கருணாநாயக்க.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!