ரணிலுக்காக எம்.பி. பதவியை துறப்பாரா ரவி?
அரசியலில் இருந்து தான் ஓய்வுபெற்றுவிட்டதாக ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe கட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க Ravi Karunanayake தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, ரணில் நாடாளுமன்றம் வருவதற்காக தேசிய பட்டியல் எம்.பி. பதவியை துறப்பதற்கு நீங்கள் தயாரா என ரவி கருணாநாயக்கவிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடாது என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும்.
அரசியலில் இருந்து தான் ஓய்வு பெற்றுவிட்டதாக ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் எம்மிடம் தெரிவித்துவிட்டார்.
எனினும், நீங்கள் கூறுவதுபோல ரணில் விக்கிரமசிங்க மேற்படி முடிவை எடுத்தால் நன்றி உணர்வின் அடிப்படையில் எனது தீர்மானம் அமையும்.” – என்றார் ரவி கருணாநாயக்க.





