அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா ரணில்? அவரின் திட்டம் என்ன?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் வரமாட்டார் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் நெருக்கத்துக்குரிய அரசியல் சகாக்களில் ஒருவராக ராஜித சேனாரத்ன விளங்குகின்றார்.

சஜித் தரப்புடன் பயணித்த அவர் தற்போது மீண்டும் ரணில் பக்கம் தாவியுள்ளார்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன கூறியவை வருமாறு,

“ நாடாளுமன்றம் வருவதற்குரிய தேவைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை. இது பற்றி அவர் என்னிடமும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இருந்திருந்தால் நாட்டில் சிறந்த நிலை ஏற்பட்டிருக்கும் என மக்கள் தற்போது கருதுகின்றனர். அவரை தோற்கடித்தது குறித்து மக்கள் வருந்துகின்றனர்.” – என்றார்.

எனினும், எதிரணியை ஒன்றிணைத்து அதற்குரிய அரசியல் தலைமைத்துவம் மற்றும் ஆலோசனை வழங்கும் பணியை ரணில் விக்கிரமசிங்க தற்போது முன்னெடுத்துவருகின்றார் என ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!