இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவாரா?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்த கணக்கெடுப்பு அறிக்கை கிடைத்த பின்னரே தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு சுயாதீன கணக்கெடுப்பு குழுக்கள் ஏற்கனவே தொடர்புடைய தரவுகளை பகுப்பாய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கணக்கெடுப்பின் இறுதி முடிவுகள் வரும் ஏப்ரலில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பெரும்பான்மை வாக்குகளுக்கு இடம் கிடைத்தால் மட்டுமே விக்ரமசிங்கே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் இணைய சேனல் ஒன்று மூலம் தெரியவந்துள்ளது.





