அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் நீடிக்கப்படுவது ஏன்? பிரதமர் விளக்கம்!

அவசரகால சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய Harini Amarasooriya தெரிவித்தார்.

அவசர காலசட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ பேரிடர் நிலைமையை முகாமை செய்வதற்காகவே அவசர கால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. மாறாக கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக அது பயன்படுத்தப்படவில்லை.” எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

உரிய ஆய்வுகளின் பின்னரே மக்களை மீளகுடியமர்த்த வேண்டும். இதற்குரிய பணிகளை அரசாங்க அதிகாரிகள் முன்னெடுப்பதற்காகவும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காகவுமே அவசரகால சட்டம் நீடிக்கப்படுகின்றது என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!