அவசரகால சட்டம் நீடிக்கப்படுவது ஏன்? பிரதமர் விளக்கம்!
அவசரகால சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய Harini Amarasooriya தெரிவித்தார்.
அவசர காலசட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ பேரிடர் நிலைமையை முகாமை செய்வதற்காகவே அவசர கால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. மாறாக கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக அது பயன்படுத்தப்படவில்லை.” எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
உரிய ஆய்வுகளின் பின்னரே மக்களை மீளகுடியமர்த்த வேண்டும். இதற்குரிய பணிகளை அரசாங்க அதிகாரிகள் முன்னெடுப்பதற்காகவும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காகவுமே அவசரகால சட்டம் நீடிக்கப்படுகின்றது என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.





