இலங்கை செய்தி

சியாம்பலாபே பகுதியில் மீட்கப்பட்ட மண்டை ஓடு யாருடையது?

வெள்ள நிலைமையைக் கண்காணிப்பதற்காகச் சென்ற சபுகஸ்கந்த குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இறந்த நபரின் மண்டை ஓடு ஒன்றை கண்டறிந்துள்ளார்.

இன்று (15) காலை 10.30 மணியளவில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியாம்பலாபே, கலஹிடியாவ பாலத்தை அண்மித்த பகுதிக்கு சென்ற போதே அவர் இந்த மண்டை ஓட்டை அவதானித்துள்ளார்.

அதன்படி அங்கொடையில் கொல்லப்பட்ட பெண்ணின் தலை இதுவா என கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மஹர நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதன் பின்னர், மண்டை ஓடு குறித்த பெண்ணின் தலையா என்பதை கண்டறிய மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பெண்ணை கொலை செய்த சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்ததையடுத்து, அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கடும் மழை காரணமாக பெண்ணின் தலை கிடைக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!