இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை எப்போது நிறைவுக்கு வரும்?

நாட்டிலிருந்து பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் ஒழிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் உணரும் போது நீதியின் செயற்பாடு முடிவுக்கு வரும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நடவடிக்கைகளை பாதியில் நிறுத்தினால், தற்போதைய நிலைமையை மீட்டெடுக்க முடியும் எனவும், அதனை சரியான புரிதலுடன் கையாள்வதாகவும் தெரிவித்தார்.

பாதாள உலகத்துடன் தொடர்பில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் போதைப்பொருளும் பாதாள உலகமும் ஒழிந்துவிட்டது என்பதை இந்நாட்டு மக்கள் உணரும் நாளே அது முடியும் நாளாகும். அதுவரை நாம் இதைச் செய்ய வேண்டும், காரணம் பாதியில் நிறுத்தப்பட்டால், அது திரும்புவதற்கு அதிக நேரம் எடுக்காது என்றும் அவர் கூறினார்.

(Visited 23 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!