ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஐவர் வால் து மார்ன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வால் து மார்னில் உள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை காலை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அச்சுறுத்தல் விடுத்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 தொடக்கம் 17 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் Villeneuve-Saint-George மற்றும் Sucy-en-Brie நகரங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை பிரான்சில் 996 வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!