இலங்கை

கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன : ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் பிரபா கருத்து!

கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன. ஈரோஸக்கு அல்லது எனது பத்து உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் தருவீர்களானால் கிழக்கு மாகாணத்தினை தூய்மைப்படுத்தி தருவேன் என ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.

கிழக்கில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பிள்ளையான் குழு ஆகியவற்றிடம் உள்ள ஆயுதங்களை என்னால் களையமுடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

கல்லடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனர் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுவருவதன் காரணமாக அவருக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி முன்வரவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

எதிர்வரும் ஓக்ஸ்ட் மாதத்திற்கு முன்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் செயற்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள்,பொரும்பான்மை மக்கள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ரணில்விக்ரமசிங்கவையே ஜனாதிபதியாக தெரிவுசெய்யவேண்டும் எனவும் பிரபா இதன்போது தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!