இலங்கை செய்தி

அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமையினால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ், பசறை இளைஞர்கள் எதிர்காலத்தில் அரசியலில் பெரும் நம்பிக்கையுடன் இருப்பார்கள் என குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அமைப்பாளராக லெட்சுமன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவிடம் இருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!