இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை: நீடித்த அமைதி குறித்து நம்பிக்கை
அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. Vance மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) ஐ தனித்தனியாக சந்தித்துள்ளனர்.
இந்தச் சந்திப்புகள், மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதலுக்கு நீடித்த அமைதியை ஏற்படுத்த உதவும் என ஷெரீஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆறு வாரங்களாக நீடிக்கும் இந்த மோதல் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும், உலக பொருளாதாரத்திலும் எரிசக்தி சந்தைகளிலும் கடுமையான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, பேச்சுவார்த்தைகள் இரண்டு தனித்தனி வழிகளில் நடைபெற்று வருகின்றன . ஒன்று பாகிஸ்தான்–அமெரிக்கா இடையே, மற்றொன்று பாகிஸ்தான்–ஈரான் இடையே. தேவையான முன்னேற்றம் ஏற்பட்டால், இவை முத்தரப்பு பேச்சுவார்த்தையாக மாற வாய்ப்பு உள்ளதெனவும் கூறப்படுகிறது.
மேலும், பேச்சுவார்த்தைகளின் இறுதி வடிவம் தொடர்பான முடிவுகள் தெஹ்ரான் மற்றும் வொஷிங்டனின் முடிவுகளின் அடிப்படையில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





