இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் சீரற்ற காலநிலை – 1872 பேர் பாதிப்பு – பொது மக்களிடம் விசேட கோரிக்கை

நிலவும் சீரற்ற வானிலையினால் கடந்த ஐந்து நாட்களில் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதில் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், சீரற்ற வானிலையினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனர்த்த பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் கைபேசிகளை எப்போதும் முழுமையாக மின்னேற்றம் (சார்ஜ்) செய்து வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஏனெனில் செயலில் உள்ள கைபேசி இணைப்பு பேரழிவு ஏற்படுமாயின் உதவிகளை பெறுவதற்கு இலகுவாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!