ஹார்முஸ் நீரிணை: ஐ.நா. பாதுகாப்பு சபை வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!
ஹார்முஸ் நீரிணையில் Strait of Hormuz பயணிக்கும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பஹ்ரைன் Bahrain முன்மொழிந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் UN Security Council இன்று (03) வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், அது நாளைவரை (04) பிற்போடப்பட்டுள்ளது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேவையான தற்காப்பு வழிமுறைகளை பயன்படுத்த மேற்படி பிரேரணைமூலம் முன்மொழியப்பட்டிருந்தது.
எனினும், பலவந்தமான நடவடிக்கைகளை உள்ளடக்கிய எந்தவொரு பிரேரணையையும் சீனா கடுமையாக எதிர்க்கும் என்பதால் இது நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பிரேரணையை தோற்கடிக்க முடியும்.




