ஹார்முஸ் நீரிணை விவகாரம்: ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்!
ஹார்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைமீது இன்று (07) விவாதம் நடைபெறவுள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியான எரிபொருள் விநியோகத்தை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது.
நட்பு நாடுகளுக்கு மட்டுமே அதில் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கிவருகின்றது.
இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பன இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் பஹ்ரைன் நாட்டின் கோரிக்கைக்கமையவே மேற்படி பிரேரணை தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது.
கடந்த சனிக்கிழமையே விவாதம் மற்றும் வாக்கெடுப்பு என்பன நடைபெற இருந்தது. எனினும், அது பிற்போடப்பட்டது.தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ள பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடல்வழிப் பயணப் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும் என பஹ்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.





