உலகம் செய்தி

இருவார கால போர் நிறுத்தம்: பல நாடுகள் வரவேற்பு! ஈரான் மக்கள் கொண்டாட்டம்!!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இருவார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா, எகிப்து, ஈராக் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலையான அமைதி ஏற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவிய பாகிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கவும் அனைத்துத் தரப்பினரையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக” பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் எகிப்து தனது முயற்சிகளைத் தொடரும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மேலும் சில ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளும் போர் நிறுத்த முயற்சியை வரவேற்றுள்ளன.

இரு வார கால போர் நிறுத்தத்தையடுத்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மக்கள் ஒன்றுதிரண்டு, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!