இலங்கை செய்தி

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்த உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன்ட் ஒருவரையும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

மாவத்தகம பொலிஸ் நிலையத்தினால் சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த அதிகாரிகள் தொடர்பான உண்மைகள் தெரியவந்ததையடுத்து பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர், குருநாகல் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்வதாகக் கண்டறியப்பட்ட டுபாய் சம்பத் என்பவருடன் வாட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், பொலிஸ் சார்ஜன்ட் ஓமந்தயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரியாவார்.

இந்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை