யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)