இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 25 பேர் வைத்தியசாலையில்!
ஹம்பாந்தோட்டை – மாத்தறை பிரதான வீதியின் பல்லேமலல பகுதியில் இன்று (18) பிற்பகல் 1 மணியளவில், இரு பேருந்துகள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 25 பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டு பயணிகள் மூவர் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தெஹியத்தக்கண்டியிலிருந்து காலி நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து, தனக்கு முன்னால் பயணித்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது இந்த விபந்து நிகழ்ந்ததாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.





