பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை
பாகிஸ்தானில் நடைபெறும் அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் உடன்பாட்டை எட்டத் தவறினால், ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
New York Post-க்கு அளித்த பேட்டியில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீண்டும் ஆயுதங்களால் நிரப்பப்பட்டு வருவதாகவும், இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகச் சிறந்த ஆயுதங்கள் ஏற்றப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
“உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த ஆயுதங்களை மிகவும் திறம்பட பயன்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.





