முற்றுகையை நெருங்கினால் ஈரானிய ‘தாக்குதல் கப்பல்கள்’ முழுமையாக அழிக்கப்படும்
அமெரிக்க கடற்படை அமைத்துள்ள முற்றுகைக்கு அருகில் ஈரானின் தாக்குதல் கப்பல்கள் நெருங்கினால் அவை முற்றிலுமாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரம்ப் தனது பதிவில், “ஈரானின் கடற்படை, 158 கப்பல்களுடன், கடலின் அடியில் முற்றிலுமாக அழிந்து கிடக்கிறது.
அவர்கள் ‘வேகமான தாக்குதல் கப்பல்கள்’ என்று அழைக்கும் சிறிய எண்ணிக்கையிலான கப்பல்களை நாங்கள் தாக்கவில்லை,
ஏனெனில் அவற்றை நாங்கள் ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கப்பல்களில் ஏதேனும் ஒன்று நமது முற்றுகைக்கு அருகில் வந்தால், கடலில் படகுகளில் உள்ள போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக நாம் பயன்படுத்தும் அதே அழிக்கும் முறையைப் பயன்படுத்தி, அவை உடனடியாக முற்றிலுமாக அழிக்கப்படும்.”
டிரம்ப் நிர்வாகம், செப்டம்பர் மாதம் முதல் கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் என சந்தேகிக்கப்படுபவை மீது டஜன் கணக்கான கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில் 130 க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.





