ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவிற்கு பயணம் செய்கிறீர்களா? அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்

ஐரோப்பிய ஆணையம் அடுத்த மாதம் ஜூன் 11 முதல், ஷெங்கன் விசா கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளது.

பணவீக்கம், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் போன்றவை கட்டண உயர்வுக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

6 வயது முதல் 12 வயது வரையுள்ள சிறார்களுக்கு 40லிருந்து 45 யூரோ வரை உயர இருப்பதாகவும், பெரியவர்களுக்கு 80ல் இருந்து 90 யூரோ வரை உயர இருப்பதாக ஸ்லோவேனிய வெளியுறவு மற்றும் ஐரோப்பிய அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அனுமதியின்றி தங்கியிருக்கும் குடிமக்களைத் திருப்பி ஏற்றுக்கொள்ளாத நாடுகளுக்கு விசா கட்டணத்தை 180 யூரோ வரை உயர்த்த இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

’குறுகிய கால ஷெங்கன் விசா கட்டணத்தை உலகளவில் 12 சதவீதம் உயர்த்த ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூன் 11, 2024 முதல் அமலுக்கு வரும்’ என்று ஸ்லோவேனிய அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஷெங்கன் விசா என்பது ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள் ஐரோப்பாவின் 29 நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கும் ஒருவகை விசா ஆகும்.

ஷெங்கன் நாடுகள் என்பது 25 ஐரோப்பிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய 29 நாடுகளைக் கொண்ட பகுதியாகும்.

இதில் இத்தாலி, பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்பெயின், ஃப்ரான்ஸ், நார்வே உள்ளிட்ட 29 நாடுகள் அடங்கும்.

கடைசியாக, கடந்த 2020-ல் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த முறை பணவீக்கம், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் போன்றவை கட்டண உயர்வுக்குக் காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி