இலங்கை

இலங்கையில் ரயில்கள் இரத்து – நெருக்கடியில் மக்கள்

இலங்கையில் இன்று காலை இயக்கப்படவுள்ள அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தை ரயில் சாலை கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக குறித்த இரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றைய தினம் 80க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்தானதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தை ரயில் சாலையின் பிரதி கட்டுப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்