ஆசியா

இந்தோனேசியாவில் சாரதியின் செயலால் நேர்ந்த விபரீதம் : 11 பேர் பலி!

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட்டமளிப்பு விழாவிற்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஸ் பிரேக் போடாததால் பல கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 53 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டமளிப்பு விழாவுக்காக பயணித்த மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்படுவதற்கு முன்னர் பேருந்தின் பிரேக் செயலிழந்துள்ளதாக நாட்டின் வீதி பாதுகாப்பு பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!