வட அமெரிக்கா

டிக்டாக்கால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – டொனால்ட் ட்ரம்ப்

டிக்டாக் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , முகநூல் மக்களின் எதிரி எனவும் வர்ணித்துள்ளார்.எனினும் இதனை தடை செய்வதை நான் ஆதரிக்கமாட்டேன் என தெரிவித்த டிரம்ப், ஏன் என்றால் அதனை தடைசெய்தால் மக்களின் எதிரியான முகநூலின் ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசி நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். நாங்கள் அமெரிக்க மக்களின் அந்தரங்கள் மற்றும் தரவு உரிமைகளை பாதுகாக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என டிரம்ப் பதிலளித்துள்ளார்.அதேவேளை டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வதை டிரம்ப் முதலில் ஆதரித்திருந்தார் எனினும் தனது முடிவை தற்போது மாற்றியுள்ளார்.

ஏன் டிக்டாக்கினை தடை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், எனது ஆட்சிக்காலத்தில் அதனை தடைசெய்திருக்க முடியும் ஆனால் காங்கிரஸே அதனை செய்யவேண்டும்என அவர் தெரிவித்துள்ளார்.

டிக்டாக்கினை தடை செய்வது மக்களின் எதிரி என கடுமையாக விமர்சிக்கப்படும் முகநூலிற்கான ஆதரவை அதிகரிக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிக்டாக்கினால் நன்மைகளும் உள்ளன தீமைகளும் உள்ளன ஆனால் டிக்டாக் பிடிக்காத விடயம் என்னவென்றால் டிக்டாக்கினை இல்லாமல் செய்தால் அது முகநூலை பெரியவிடயமாக்கிவிடும் ஏனைய ஊடகங்கள் பலவற்றுடன் நான் முகநூலை மக்களின் எதிரியாக கருதுகின்றேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!