ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி
புஸ்ஸ பிந்தலியா ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
17 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





