இலங்கை செய்தி

காஸா பகுதியில் தீவிரமடைந்துள்ள போர்!! நாடு திரும்ப விரும்பாத இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் முரண்பாடு நிலவி வருகின்ற போதிலும், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எவரும் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையர்கள் எவரேனும் திரும்பி வர விரும்பினால், அதற்கான அனைத்து வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, ஆனால் காசா பகுதிக்கு அண்மித்த பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் கூட அங்கு தங்குவதற்கு அதிக விருப்பத்துடன் உள்ளனர்.

நாடு திரும்ப விரும்பும் எந்தவொரு இலங்கையர்களுக்கும் தேவையான வசதிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸா பகுதியை அண்மித்துள்ள இலங்கையர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை