இலங்கை செய்தி

பேசிக்கொண்டிருந்த மாணவ, மாணவி மீது மோதிய ரயில்

அம்பலாங்கொட புகையிரத பாதையில் பயணித்த பாடசாலை மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் இன்று (07) மாலை புகையிரதத்தில் மோதி காயமடைந்துள்ளனர்.

பேசிக் கொண்டிருந்த போது ரயில் அவர்கள் மீது மோதியதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

படுகாயமடைந்த இரு மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் பதினேழு வயதுடைய மாணவர்கள் எனவும் அவர்கள்  அம்பலாங்கொடையில் உள்ள இரண்டு பிரதான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் அம்பலாங்கொடை ஹிரேவத்த பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், மாணவி அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், மாணவனுக்கு பலத்த காயம் அடைந்ததாகவும், மாணவிக்கு கீறல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த பாடசாலை மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதும் சுயநினைவின்றி இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
See also  ஈரானின் எண்ணை வயல்கள் அழிக்கப்படும் - அமெரிக்கா எச்சரிக்கை
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content