இலங்கை செய்தி

தந்தை மதுபானம் குடிக்க 3 குழந்தையில் கழுத்தில் கத்தியை வைத்த மகன்

தந்தை மதுபானம் குடிப்பதற்கு பணம் சேர்க்க 3 வயது குழந்தையின் கழுத்தில் துப்பாக்கியை கட்டி கொள்ளையடித்த 13 வயது சிறுவன் பாணந்துறை பிங்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பிங்வத்த பிரதேசத்தில் தாயொருவர் தனது சிறு குழந்தையுடன் இருந்த போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான சிறுவனிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் மதுபானம் குடிக்க பணம் இல்லாத நிலையில் தந்தை தனது தாயை துன்புறுத்துவது தெரியவந்துள்ளது.

அதற்கு தீர்வாகவே சிறுவன் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர். சிறுவர்கள் மூலம் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

சில போலி நாணயத்தாள்களுடன் மன்னார் தல்பதுவையில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மன்னார் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்திற்குரிய சிறுவனைசிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!