இலங்கை செய்தி

கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர் சடலமாக கண்டெடுப்பு!

கொஹுவலை பிரதேசத்தில், பாடசாலை மாணவர் ஒருவரின் பணப்பையை திருடிய நபர் பொது மக்களால் கற்களால் தாக்கப்பட்டு தப்பி ஓடியதையடுத்து பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் சனிக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

சனிக்கிழமை, கொஹுவலை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவரை கூரிய ஆயுதத்தை காட்டி அச்சுறுத்தி மாணவரின் பணப்பையை பறித்து சென்ற நபர் பொது மக்களால் கற்களால் தாக்கப்பட்டு தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் குறித்த நபரின் சடலம் நுகேகொட, நலந்தாராம வீதியில் நடைபாதை பாதைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் தலையின் பின்புறம் மற்றும் காதுக்கு அருகில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!