இந்தியா

கையும் களவுமாக சிக்கியவுடன் லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரி!(வீடியோ)

லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரி ஒருவர் கையும் களவுமாக சிக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்திய மாநிலம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள கட்னி பகுதியைச் சேர்ந்தவர் சந்தன் சிங் லோதி. இவர், நில வழக்கு தொடர்பாக அப்பகுதியில் உள்ள வருவாய் துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, வருவாய் துறை அதிகாரியான கஜேந்திர சிங் 5,000 ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார்.

உடனே ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையிடம் சந்தன் சிங் லோதி புகார் அளித்துள்ளார். பின்பு, ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறை அதிகாரிகள் சந்தன் சிங் லோதியிடம், அவர் கேட்ட பணத்தை கொடுங்கள் என்று கூறினர்.

https://twitter.com/umasudhir/status/1683756798623514626?s=20

இதனையடுத்து, கஜேந்திர சிங்கின் தனி அலுவலகத்தில் வைத்து சந்தன் சிங் லோதி லஞ்ச பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த ஜபல்பூர் லோக்ஆயுக்தா அதிகாரிகளை கஜேந்திர சிங் பார்த்துள்ளார்.பின்னர், வருவாய்த்துறை அதிகாரி தான் பெற்ற லஞ்ச பணத்தை மறைக்க வாயில் போட்டு விழுங்கினார்.

கஜேந்திர சிங்கின் தனி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்பு, அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பல முயற்சிகளுக்குப் பிறகு, லஞ்சத் தாள்கள் அவரது வாயிலிருந்து கூழ் வடிவில் எடுக்கப்பட்டன. மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது பொலிசார் செய்தனர்.

இதனை மருத்துவமனையில் இருந்தவர்கள் வீடியோவாக எடுக்க, தற்போது வைரலாகி வருகிறது

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே