நடாஷா விவகாரம்; புருனோ திவாகரா கைது
![](https://iftamil.com/wp-content/uploads/2023/05/download-27.jpeg)
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட நதாஷா எதிரிசிங்கவிற்கு உதவிய குற்றச்சாட்டில் யூடியுபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் புரூனே திவாகர எனும் நபரையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) பிற்பகல் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சுமார் 8 மணிநேர விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 18 times, 1 visits today)