இலங்கை

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை

மத்துகம பிரதேசத்தில் கூரிய ஆயதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதென மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மத்துகம , ஓவிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவராவார். இவர் சம்பவத்தின் போது சில சந்தேக நபர்களினால் கூரிய ஆயதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்தவர் களுத்துறை – நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 24 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!