கிரிகெட் மைதானத்தில் விராட் கோஹ்லியை நோக்கி ஓடிய நபரால் பதற்றம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நடந்த வித்தியாசமான சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்தது.
போட்டியின் போது பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்கு ஓடினார். இதனால் போட்டி சற்று தடைப்பட்டது. போட்டியின் 13வது ஓவரின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்கு பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்த நபர் திடீரென மைதானத்துக்குள் புகுந்து இந்திய வீரர் கோஹ்லிக்கு அருகில் ஓடினார்.
எனினும் உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு படையினர் குறித்த நபரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)